Deprecated: Creation of dynamic property QuranForAll::$default_reader_aya is deprecated in /home/m3aqnet/public_html/m3aq.com/includes/class.php on line 170
Surah Al-'alaq ( The Clot ) | தமிழ்
Surah Al-'alaq ( The Clot )

தமிழ்

Surah Al-'alaq ( The Clot ) - Aya count 19

ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ﴿١﴾

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.

خَلَقَ ٱلْإِنسَٰنَ مِنْ عَلَقٍ ﴿٢﴾

'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ ﴿٣﴾

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ ﴿٤﴾

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

عَلَّمَ ٱلْإِنسَٰنَ مَا لَمْ يَعْلَمْ ﴿٥﴾

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.

كَلَّآ إِنَّ ٱلْإِنسَٰنَ لَيَطْغَىٰٓ ﴿٦﴾

எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.

أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ ﴿٧﴾

அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,

إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ ﴿٨﴾

நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.

أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ ﴿٩﴾

தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?

عَبْدًا إِذَا صَلَّىٰٓ ﴿١٠﴾

ஓர் அடியாரை - அவர் தொழும்போது,

أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ ﴿١١﴾

நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,

أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ ﴿١٢﴾

அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,

أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ﴿١٣﴾

அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,

أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ﴿١٤﴾

நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ ﴿١٥﴾

அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.

نَاصِيَةٍۢ كَٰذِبَةٍ خَاطِئَةٍۢ ﴿١٦﴾

தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,

فَلْيَدْعُ نَادِيَهُۥ ﴿١٧﴾

ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.

سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ ﴿١٨﴾

நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.

كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩ ﴿١٩﴾

(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.